Wednesday, May 20, 2015

யார் இவர்? - முஆத் பின் ஜபல் ரலி

1 நால்வரில் ஒருவரிடம் அல்குர்ஆனை கற்றுக்கொள்ளுங்கள் என்று கூறியோரில் இவரும் ஒருவர். 
2 இவர் நபியவர்களுடன் தொழுது விட்டு தன்னுடையை சமுகத்தாரிடம் சென்று இமாமாக தொழுகை நடத்துவார்கள் 
3 இவரை நபியவர்கள் யமனுக்கு ஆளுனராக அனுப்பினார்கள் 
4 வேதம் கொடுக்கப்பட்டவர்களை ஏகத்துவ கொள்கையின் பக்கம் அழைக்கும் பணியை செய்தவர்கள்.
5 உபை பின் கஅப் (ரலி) அவர்களைப் பற்றி பனுஸலமா கூட்டத்தாரில் ஒருவர் கூறை சொன்னபோது அவரைப் பற்றி நல்லவிதமாக நபியவர்களிடம் எடுத்துச் சொன்னவர். 
6 ஒரு மனிதர் முஸ்லிமாகி பின்னர் யாஹ‚தியாக மாறியவரை கொல்லும் வரை நான் உட்கார மாட்டேன் என்று கூறியவர். 
7 ஒரு கூட்டத்தாரை இஸ்லாத்துக்கு அழைக்கும் போது கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறையை இவருக்கு நபியவர்கள் கூறினார்கள் 
8 அல்லாஹ் அடியார்களுக்கு செய்ய வேண்டிய கடமைகளையும், அடியார்கள் அல்லாஹ்வுக்கு செய்ய வேண்டிய கடமைகளையும் பற்றி செய்தியை அறிவித்தவர் 
9 நபியவர்கள் இவரை யமனுக்கு அனுப்பும் போது அநீதிக்குள்ளாக்கப்படவருடைய பிராத்தனைக்கு பயந்து கொள் என்ற இவரிடம் கூறினார்கள். 
10 நபி (ஸல்) அவர்கள் சில பெண்களிடம் ஒப்பாரி வைத்து அழக்கூடாது என்று உறுதிப் பிரமாணம் எடுத்தார்கள். அவர்களில் இந்த நபித்தோழரின் மனைவியும் இடம்பெற்றிருந்தார். 

விடை
முஆத் பின் ஜபல் ரலி அவர்கள்

1 ஆதாரம் புகாரி (3758) 2 ஆதாரம் புகாரி (700-701) 
3 ஆதாரம் புகாரி (1458) 4 ஆதாரம் புகாரி (1458) 
5 . ஆதாரம் புகாரி (4418) 6 ஆதாரம் புகாரி(4344 -4345) 
7 ஆதாரம் புகாரி (1496) 8 ஆதாரம் புகாரி (7373) 
9 ஆதாரம் புகாரி (2448) 10 ஆதாரம் புகாரி (1306) 

No comments:

Post a Comment