Saturday, June 15, 2019

திக்ர் - அல்லாஹ்வை நினைவு கூர்வதன் சிறப்பு

அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறான்:

"எனவே என்னை நீங்கள் நினைவுகூருங்கள்; நான் உங்களை நினைவு கூருவேன். எனக்கு நன்றி செலுத்துங்கள்;(என் அருட்கொடைகளை மறுத்து) நன்றி மறவாதீர்கள்". (குர்ஆன் 2:152)


"இறைநம்பிகை கொண்டவர்களே, அல்லாஹ்வை அதிகம் அதிகமாக நினைவு கூருங்கள்" (குர்ஆன் 31:41)


"அல்லாஹ்வை அதிகம் அதிகமாக நினைவுகூரக்கூடிய ஆண்கள் - பெண்கள் யாரோ அவர்களுக்கு மன்னிப்பையும் மகத்தான கூலியையும் அல்லாஹ் தயார் செய்து வைத்துள்ளன்". (குர்ஆன் 32:35)


மேலும் காலையிலும் மாலையிலும் - உம் மனத்திற்க்குள் பணிவாகவும் அச்சத்துடனும் மெதுவான குரலிலும் உம் இறைவனை நினைவுகூர்வீராக! மோலும் அலட்சியமாய் இருப்பவர்களுள் நீரும் ஒருவராகி விடாதீர்" (குர்ஆன் 7:205)


அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "தன் இறைவனை நினைவு கூருகிற மனிதன் மற்றும் தன் இறைவனை நினைவுகூராத மனிதன் இருவரின் உதாரணம் உயிருள்ளவனையும் மரணமானவனையும் போன்றதாகும்"

நூல்: புகாரி -பத்ஹுல் பாரி (பாகம் 11 பக்கம் 208)

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் வினவினார்கள்: நான் உங்களுக்கு ஓர் அமலை அறிவித்துத் தரவா? அது உங்களின் எல்லா அமல்களை விடவும் சிறந்தது. உங்கள் அரச(ன் இறைவ)னிடதில் மிகவும் தூய்மையானது: உங்கள் அந்தஸ்துகளை உயர்தக் கூடியது: தங்கம் வெள்ளியை நீங்கள் செலவு செய்வதை விடவும் உங்களுக்குச் சிறந்தது: மட்டுமல்ல, நிங்கள் உங்கள் எதிரிகளுடன் போரிட்டு- நீங்கள் அவர்களின் கழுத்தையும் அவர்கள் உங்களின் கழுத்தையும் வெட்டுவதை விடவும் சிறந்ததும் ஆகும்" தோழர்கள்: " அவசியம் கற்றுத் தாருங்கள் என்று. நபியவர்கள் கூறினார்கள்: 'அதுதான் அல்லாஹ்வை திக்ர் செய்வது-நினைவு கூர்வது' 

நூல்: திர்மிதி. பாகம்: 5. பக்கம்: 459.இப்னுமாஜா: பாகம் 2. பக்கம் 1245.பார்க்க: ஸஹீஹ் இப்னுமாஜா பாகம் 2. பக்கம் 316ஸஹீஹ் திர்மிதி பாகம்3. பக்கம் 139.


அண்ணல் நபி (ஸல்) அவர்கள் அருளினார்கள்: "அல்லாஹ் கூறுகிறான்: என் அடியான் (மனிதன்) என்னைக் குறித்து என்ன எண்ணம் கொண்டுள்ளானோ அதற்கு ஏற்பவே நான் உள்ளேன். அவன் என்னை நினைவு கூறும்போது நான் அவனுடன் இருக்கிறேன். அவன் என்னை மனதினுள் நினைவு கூர்ந்தால் நானும் அவனை என் மனதினுள் நினைவு கூர்கிறேன். அவன் என்னை ஒரு கூட்டத்தில் நினைவு கூர்ந்தால் அதனை விடவும் சிறந்த கூட்டத்தில் நான் அவனை நினைவு கூர்கிறேன். அவன் என்னை நோக்கி ஒரு சாண் நெருங்கி வந்தால் நான் அவனை நோக்கி ஒரு முழம் நெருங்கிச் செல்கிறேன். அவன் என்னை நோக்கி ஒரு முழம் நெருங்கி வந்தால் நான் அவனை நோக்கி ஒரு பாகம் நெருங்கிச் செல்கிறேன். அவன் என்னை நோக்கி நடந்து வந்தால் நான் அவன் பக்கம் ஓடோடிச் செல்கிறேன். 
நூல்: புகாரி. பாகம் 8. பக்கம் 171.-முஸ்லிம் பாகம் 4. பக்கம் 2061.


அப்துல்லாஹ் இப்னு புஸ்ர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: "ஒரு மனிதர் கேட்டார்: அல்லாஹ்வின் தூதரே! இஸ்லாத்தின் கடமைகள்-நெறிமுறைகள் என்னைப் பொறுத்து மிகவும் அதிகமாகி விட்டன. எனவே ஒரு விஷயத்தை எனக்கு நீங்கள் அறிவித்துத் தாருங்கள். நான் அதை உறுதியாகப் பற்றிக் கொள்வேன்" அதற்கு நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். "உமது நாவு அல்லாஹ்வின் திக்ரில் ஈடுபட்டு பசுமையாக இருக்கட்டுமாக!" 
நூல்: திர்மிதி. பாகம்: 5. பக்கம்: 458.இப்னுமாஜா பாகம்:2. பக்கம்: 1246.ஸஹீஹ் திர்மிதி பாகம்: 3. பக்கம்: 139.ஸஹீஹ் இப்னுமாஜா பாகம்: 2. பக்கம்: 317.

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் அருளினார்கள்: "எவர் அல்லாஹ்வின் வேதத்தில் இருந்து ஒரு எழுத்தை ஓதுகிறாரோ அவருக்கு அதன் பொருட்டால் ஒரு நன்மையுண்டு. அந்த ஒரு நன்மை, அதே போன்று பத்து நன்மைகளுடன் அதிகரிக்கிறது. அலிஃப், லாம், மீம் என்பது ஒரு எழுத்து என்று நான் கூறவில்லை. மாறாக அலிஃப் ஒரு எழுத்து, லாம் ஒரு எழுத்து, மீம் ஒரு எழுத்து". 

நூல்: திர்மிதி பாகம்: 5. பக்கம்: 175.ஸஹீஹ் திர்மிதி பாகம்:3. பக்கம்: 9.அல்ஜாமிஉஸ் ஸகீர் பாகம்:5 பக்கம்:340

உக்பா இப்னு ஆமிர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: "நாங்கள் ஸுஃப்பாவில் (மஸ்ஜிதின் முன் வராந்தாவின் திண்ணையில்) இருந்து கொண்டிருந்தபோது நபி (ஸல்) அவர்கள் (வீட்டில் இருந்து) வெளியே வந்தார்கள். அப்போது கூறினார்கள்: "தினமும் பத்ஹாவுக்கு அல்லது அகீகிற்கு சென்று அங்கிருந்து பெரிய பெரிய கொழுத்த இரண்டு ஒட்டகங்களை பாவமோ, பந்த முறிவோ இல்லாத வகையில் கொண்டு வருவதை விரும்புபவர் உங்களில் எவரும் உண்டா?" அதற்கு நாங்கள் கூறினோம்: "அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் அனைவருமே அதை விரும்புகிறோம்." நபியவர்கள் சொன்னார்கள்: "உங்களில் ஒருவர் மஸ்ஜிதுக்குச் சென்று, அல்லாஹ்வின் வேதத்திலிருந்து இரண்டு வசனங்களை கற்றுக் கொடுக்கவோ, ஓதவோ செய்யலாமே! இரண்டு வசனங்களை ஓதுவது அவருக்கு இரண்டு ஒட்டகங்களை விடவும் சிறந்ததாகும். மூன்று வசனங்கள் என்றால் மூன்று ஒட்டகங்களை விடச் சிறந்ததாகும். நான்கு வசனங்கள் என்றால் நான்கு ஒட்டகங்களை விடச் சிறந்ததாகும். இவ்வாறே அவற்றின் எண்ணிக்கைகளுக்கு ஏற்ப உள்ள அத்தனை ஒட்டகங்களை விடச் சிறந்ததாகும்" 

நூல்: ஸஹீஹுல் முஸ்லிம் பாகம்: 1. பக்கம்: 553.

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் அருளினார்கள்: "ஒருவர் தான் அமர்ந்திருந்த இடத்தில் அல்லாஹ்வை நினைவு கூர்ந்திடவில்லையெனில் அல்லாஹ்வின் புறத்திலிருந்து அவர்மீது அது குறைபாட்டிற்குரியதாக அமைந்து விடும். ஒருவர் தான் படுத்திருந்த இடத்தில் அல்லாஹ்வை நினைவு கூர்ந்திடவில்லையெனில் அதுவும் அல்லாஹ்வின் புறத்திலிருந்து அவர்மீது குறைபாட்டிற்குரியதாக அமைந்து விடும்." 
நூல்: அபூதாவூத் பாகம்: 4. பக்கம்: 264

"எந்த ஒரு கூட்டத்தினரும் தாங்கள் அமர்ந்திருந்த இடத்தில் அல்லாஹ்வை நினைவு கூர்ந்திடாமலும் தங்களின் நபி மீது ஸலவாத்துச் சொல்லாமலும் இருப்பார்களானால் அது அவர்கள் மீது நஷ்டத்திற்குரியாதாகவே அமைந்து விடும். பிறகு அவன் (அல்லாஹ்) நாடினால் அவர்களை வேதனையில் ஆழ்த்துவான். அவன் நாடினால் அவர்களை மன்னிப்பான்."

நூல்: திர்மிதி. பார்க்க: ஸஹீஹுத் திர்மிதி பாகம்:3. பக்கம்: 140

"ஒரு கூட்டத்தினர் தாங்கள் அமர்ந்திருந்த இடத்தில் அல்லாஹ்வை நினைவு கூர்ந்திடாமல் எழுந்தார்களேயானால், அவர்கள் செத்த கழுதையை விட்டுவிட்டு எழுந்து சென்றவர்கள் போல் ஆவார்கள். மேலும் அது அவர்களுக்கு கைசேதமாகவே அமையும்!"

கூட்டுத் தொழுகையின் சிறப்பு

ஒரு மனிதர் தனித்து தொழுவதை விட கூட்டாகத் தொழுவது 27 மடங்கு சிறந்ததாகும் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர்: இப்னு உமர் ரழியல்லாஹு அல்லாஹு) நூல்: புகாரி, முஸ்லிம், திர்மிதி

ஜனாஸா தொழுகை அதில் கலந்து கொள்பவரின் சிறப்பு

”ஜனாஸாத் தொழுகையில் பங்கேற்கிறவருக்கு ஒரு கீராத் நன்மையுண்டு: அடக்கம் செய்யப்படும் வரை கலந்து கொள்கிறவருக்கு இரண்டு கீராத்கள் நன்மை உண்டு’ என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது ‘இரண்டு கீராத்கள் என்றால் என்ன?’ என வினவப்பட்டது. அதற்கவர்கள், ‘இரண்டு பெரிய மலைகளைப் போன்ற அளவு (நன்மை)” என்றார்கள். - புஹாரி:1325 அபூஹூரைரா (ரலி)

ஜனாஸாவைப் பின்தொடர்கிறவருக்கு ஒரு கிராத் நன்மையுண்டு என அபூஹுரைரா (ரலி) கூறினார் என இப்னு உமர் (ரலி) அவர்களிடம் கூறப்பட்டதும் ‘அபூஹுரைரா (ரலி) மிகைப்படுத்துகிறார்’ என்றார். ஆயிஷா (ரலி) அபூஹுரைரா (ரலி)வின் கூற்றை உண்மைப்படுத்தியதுடன், ‘நானும் நபி (ஸல்) அவர்கள் அவ்வாறு கூறக் கேட்டிருக்கிறேன்’ என்றும் கூறினார். இதைக் கேட்ட இப்னு உமர் (ரலி) ‘அப்படியாயின் நாம் அதிகமான கீராத்களைப் பாழ்படுத்தி விட்டோமே’ என்றார். - புஹாரி :1324 நாபிஃ (ரலி)

காரியங்களில் சிறந்தது

‘இறைத்தூதர் அவர்களே! இஸ்லாத்தில் சிறந்தது எது?’   என்று நபித்தோழர்கள் கேட்டதற்கு ‘எவருடைய நாவிலிருந்தும் கரத்திலிருந்தும் பிற   முஸ்லிம்கள் பாதுகாப்புப் பெற்றிருக்கிறாரோ அவரின் செயலே சிறந்தது’ என்று   இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அபூ மூஸா(ரலி) அறிவித்தார்.  (புஹாரி) 

ஒருவர் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் ‘இஸ்லாத்தில் சிறந்தது எது’ எனக்   கேட்டதற்கு, ‘(பசித்தோருக்கு) நீர் உணவளிப்பதும் நீர் அறிந்தவருக்கும்   அறியாதவருக்கும் ஸலாம் கூறுவதுமாகும்’ என்றார்கள்” என அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி)   அறிவித்தார்.  (புஹாரி) 

‘ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் ‘இஸ்லாமி(யப் பண்புகளி)ல் சிறந்தது எது?’   என்று கேட்டார். ‘நீர் உணவளிப்பதும், அறிந்தவர்களுக்கும் அறியாதவர்களுக்கும் ஸலாம்   கூறுவதுமாகும்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் பதில் கூறினார்கள்” என அப்துல்லாஹ்   இப்னு அம்ர்(ரலி) அறிவித்தார்.  (புஹாரி) 

‘என்னிடம் ஒரு பெண் அமர்ந்திருக்குகிபோது நபி(ஸல்) அவர்கள் அங்கே   வந்தார்கள். ‘யார் இந்தப் பெண்மணி?’ என்று கூறிவிட்டு அவள் (அதிகமாக) தொழுவது   பற்றிப் புகழ்ந்து கூறினேன். அப்போது நபி(ஸல்) ‘போதும் நிறுத்து! நற்செயல்களில்   உங்களால் முடிந்தவற்றைச் செய்து வாருங்கள். அல்லாஹ்வின் மீது ஆணையாக நீங்கள்   சலிப்படையும் வரை அல்லாஹ் சலிப்படைவதில்லை! மேலும் மார்க்கத்தின் நல்லறங்களில்   அல்லாஹ்விற்கு மிக விருப்பமானது, நிரந்தரமாகச் செய்யும் நற்செயல்கள் தாம்’ என்று   கூறினார்கள்” என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.   (புஹாரி)

‘ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து ‘இறைத்தூதர் அவர்களே! எங்களில் ஒருவர் (தனிப்பட்ட)   கோபத்திற்காகப் போராடுகிறார். (இன்னொருவர்) தம் குலப்பெருமைகளைக் காக்கும்   சீற்றத்துடன் போரிடுகிறார். இவற்றில் இறைவழியில் செய்யப்படும் போர் எது?’ என்று   கேட்டார். உடனே நபி(ஸல்) அவர்கள், அவரை நோக்கித் தம் தலையை உயர்த்தி, ‘அல்லாஹ்வின்   கொள்கை (இவ்வுலகில்) மேலோங்குவதற்காக (மட்டும்) போர் புரிகிறவர் தாம்   மகத்துவமும் கண்ணியமுமிக்க இறைவழியில் போரிட்டவராவார்’ என்று கூறினார்கள். கேள்வி   கேட்டவர் நின்றிருந்தால்தான் நபி(ஸல்) அவர்கள் தம் தலையை உயர்த்தினார்கள்” என அபூ   மூஸா(ரலி) அறிவித்தார்.  (புஹாரி)
அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்.
அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமான செயல் எது? என்று நபி(ஸல்) அவர்களிடம் நான்   கேட்டபோது, ‘தொழுகையை அதற்குரிய நேரத்தில் தொழுவதாகும்” என்று பதில்   கூறினார்கள். அதற்கு அடுத்து எது? என்றேன். ‘பெற்றோருக்கு நன்மை செய்தல்”   என்றார்கள். அதற்கு அடுத்து எது? என்றேன். ‘இறைவழியில் அறப்போர் புரிதல்” என்றனர்.   எனக்கு இவற்றை நபி(ஸல்) அவர்கள் அறிவித்தனர். (கேள்வியை) மேலும் நான்   அதிகப்படுத்தியிருந்தால் நபி(ஸல்) அவர்களும் மேலும் சொல்லியிருப்பார்கள். (புஹாரி)
அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து, ‘இறைத்தூதர் அவர்களே! அதிக நன்மையுள்ள தர்மம்   எது?’ எனக் கேட்டார். ‘நீர், ஆரோக்கியமுள்ளவராகவும் பொருள் தேவை உடையவராகவும்,   வறுமையைப் பயப்படுபவராகவும் செல்வத்தில் ஆசை உள்ளவராகவும் இருக்கும் நிலையில்   தர்மம் செய்வதே அதிக நன்மையுள்ளதாகும். எனவே (தர்மம் செய்வதை) உயிர் தொண்டைக்   குழியை நெருங்கும் வரை தாமதப்படுத்த வேண்டாம். அந்நிலையில் இன்னாருக்கு இவ்வளவு;   இன்னாருக்கு இவ்வளவு என்று கூறுவதிலும் அர்த்தமில்லை. ஏனெனில் அப்போது உம்முடைய   பொருள்கள் மற்றவர்களுக்கென்று ஆகிவிட்டிருக்குமே!’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள்   கூறினார்கள். (புஹாரி)
 “செயல்களில் சிறந்தது எது?’ என்று நபி(ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. ‘அல்லாஹ்வையும்   அவனுடைய தூதரையும் நம்புவது” என்றார்கள். ‘அதற்குப் பிறகு எது (சிறந்தது)?’ எனக்   கேட்கப்பட்டபோது, ‘இறைவழியில் போர்புரிதல்” என்றார்கள். ‘அதற்குப் பிறகு எது (சிறந்தது?)’   எனக் கேட்கப்பட்டபோது ‘பாவச் செயல் எதுவும் கலவாத ஹஜ்” என்று பதிலளித்தார்கள். அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.(புஹாரி)
அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) கூறினார்.
நான் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம், ‘இறைத்தூதர் அவர்களே! நற்செயல்களில் சிறந்தது   எது?’ என்று கேட்டேன். அவர்கள், ‘தொழுகையை அதற்குரிய வேளையில் தொழுவது” என்று   கூறினார்கள். ‘பிறகு எது (சிறந்தது?)” என்று கேட்டேன் அவர்கள், ‘பிறகு   தாய்தந்தையருக்கு நன்மை செய்வது” என்று பதிலளித்தார்கள். நான், ‘பிறகு எது (சிறந்தது?)”   என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘இறைவழியில் அறப்போரிடுவதாகும்” என்று பதில்   சொன்னார்கள். நான் அல்லாஹ்வின் தூதரிடம் வேறெதுவும் கேட்காமல் மெளனமாகி விட்டேன்.   நான் இன்னும் கேட்டிருந்தால் அவர்கள் இன்னும் பதிலளித்திருப்பார்கள்.  (புஹாரி)



இறைவழியில் காலை நேரத்தில் சிறிது நேரம் அல்லது ஒரு மாலை நேரத்தில் சிறிது நேரம் போர் புரியச் செல்வது உலகத்தையும் அதிலுள்ள பொருட்களையும் விடச் சிறந்ததாகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். - புஹாரி : 2792 அனஸ் இப்னு மாலிக் (ரலி).
இறைவழியில் காலையிலும் மாலையிலும் சிறிதுநேரம் போர் புரியச் செல்வது உலகத்தை விடவும் அதிலுள்ள பொருட்களை விடவும் சிறந்ததாகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் - புஹாரி : 2794 ஸஹ்ல் இப்னு ஸஅத் (ரலி).
சொர்க்கத்தில் ஒரு வில்லுக்குச் சமமான (ஒரு முழம்) அளவு (இடம் கிடைப்பது) சூரியன் எதன் மீது உதித்து மறைகிறதோ அந்த உலகத்தை விடச் சிறந்ததாகும். மேலும், இறைவழியில் ஒரு காலை நேரத்தில் சிறிது நேரம் போர் புரியச் செல்வது அல்லது ஒரு மாலை நேரத்தில் சிறிது நேரம் (போர் புரியச்) செல்வது சூரியன் எதன் மீது உதித்து மறைகிறதோ அந்த உலகத்தை விடச் சிறந்ததாகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். - புஹாரி : 2793 அபூஹுரைரா (ரலி).
சிறந்த அமல்: அமல்களில் சிறந்தது எது என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் கேட்டபோது தொழுகையை அதன் ஆரம்ப நேரத்தில் தொழுவது என்றார்கள். அறிவிப்பாளர்: உம்முஃபர்வா (ரழியல்லாஹு அன்ஹு) நூல்கள் : திர்மிதி, ஹாகிம், அபூதாவூத்.