Thursday, May 21, 2015

திருக்குர்ஆன் கேள்வி பதில் பிப்ரவரி 2010

கேள்வி : மறுமை நாளில் கடவுளாக இட்டுக்கட்டி வணங்கியவைகள் என்னவாகும்?
பதில் : அவர்களை விட்டும் மறைந்துவிடும் (அல்குர்ஆன் 16:87)

கேள்வி : கைபர் போரில் யாரிடம் இஸ்லாமிய கொடியை நபிகளார் கொடுத்தார்கள்?
பதில் : அலீ (ரலி) (ஆதாரம் : புகாரி 3009)

கேள்வி : வேதனைக்கு மேல் வேதனை பெறுவோர் யார்?
பதில் : அல்லாஹ்வின் பாதையை விட்டும் தடுத்தோர்குழப்பம் செய்தோர். (அல்குர்ஆன்16:88)

கேள்வி : அல்லாஹ் யாரைப் பார்த்து வியப்படைவான்?
பதில் : சங்கிகளால் பிணைக்கப்பட்டவர்களாக சொர்க்கத்தில் நுழையும் ஒரு கூட்டத்தாரைப் பார்த்து (ஆதாரம் : புகாரி 3010)

கேள்வி : மறுமைநாளில் யாரை எதிரான சாட்சியாக அல்லாஹ் ஆக்குவான்?
பதில் : ஒவ்வொரு சமுதாயத்திலும் அவர்களிலிருந்தே அவர்களுக்கு எதிரான சாட்சியை ஆக்குவான் (அல்குர்ஆன் 16:89)

கேள்வி : அடிமைப் பெண்ணுக்கு அழகிய முறையில் கல்வியும் ஒழுக்கும் கற்பித்து,அவளையே திருமணம் செய்து கொண்டவருக்கு கிடைக்கும் கூலி எவ்வளவு?
பதில் : இரண்டு தடவை கூலி வழங்கப்படும் (ஆதாரம் :புகாரி 3011)

கேள்வி : அல்லாஹ் தடுத்தவை எவை?
பதில் : வெட்கக்கேடானவைதீமைமற்றும் வரம்பு மீறுதல் (அல்குர்ஆன் 16:90)

கேள்வி : போர் களத்தில் யாரைக் கொல்லக்கூடாது?
பதில் : பெண்களையும் குழந்தைகளையும் (ஆதாரம்:புகாரி 3015)

கேள்வி : மோசடி செய்தவற்காக சத்தியம் செய்தால் என்ன ஏற்படும்?
பதில் : உறுதிப்பட்ட பாதம் சறுகிப்போய்விடும் (அல்குர்ஆன் 16:94)

கேள்வி : நெருப்பால் தண்டனை கொடுக்க தகுதியானவன் யார்?
பதில் : அல்லாஹ் மட்டுமே (ஆதாரம் : புகாரி 3016)

கேள்வி : அல்லாஹ்வின் பாதையில் செல்வதை தடுத்தால் என்ன ஏற்படும்?
பதில் : தீங்கும் கடும் தண்டனையும் கிடைக்கும். (அல்குர்ஆன் 16:94)

கேள்வி : பத்ர் போரில் பிடிபட்ட அப்பாஸ் (ரலி) அவர்களுக்கு நபிகளார் யாருடை சட்டை அணிய கொடுத்தார்கள்?
பதில் : நயவஞ்சகனின் தலைவன் அப்துல்லாஹ் பின் உபை (ஆதாரம் : புகாரி 3008)

கேள்வி : குர்ஆன் ஓதும்போது என்ன செய்ய வேண்டும்?
பதில் : விரட்டப்பட்ட ஷைத்தானை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேட வேண்டும் (அல்குர்ஆன் 16:98)

கேள்வி : ஏமன் நாட்டு கஅபா என்று அழைக்கப்பட்ட ஆலயத்தின் பெயர் என்ன?
பதில் : துல் கலஸா (ஆதாரம் : புகாரி 3020)

கேள்வி : ஒரு வசனத்தின் இடத்தில் மற்றொரு வசனத்தை நாம் மாற்றினால் எதிரிகள் என்ன கூறினார்கள்?
பதில் : நபி இட்டுக்கட்டி செல்கிறார் என்று கூறினார்கள். (அல்குர்ஆன் 16:101)

கேள்வி : ஏமன் நாட்டு கஅபா என்று அழைக்கப்பட்ட துல்கலஸா ஆலயத்தை உடைத்தவர் யார்?
பதில் : ஜரீர் (ரலி) (ஆதாரம் : புகாரி 3020)

கேள்வி : குர்ஆன் யார் மூலம் இறக்கப்பட்டது?
பதில் : இறைவனிடமிருந்து ரூஹுல் குதுஸ் எனும் (ஜிப்ரீல் மூலம்) (அல்குர்ஆன் 16:102)

கேள்வி : யூதனின் தலைவன் அபூ ராஃபிஉ என்பவனை கொன்றவர் யார்?
பதில் : அப்துல்லாஹ் பின் அதீக் (ரலி) (ஆதாரம் : புகாரி 3023)

கேள்வி : யாருக்கு அல்லாஹ் வழிகாட்ட மாட்டான்?
பதில் : அல்லாஹ்வின் வசனங்களை நம்பாதோருக்கு (அல்குர்ஆன் 16:104)

கேள்வி : போர்களத்தின் ஏற்படும் துன்பங்களை பார்க்கும்போது எப்படி இருக்க வேண்டும்?
பதில் : நிலைகுலைந்து விடாமல் பொறுமையாக இருக்கு வேண்டும். (ஆதாரம் :புகாரி 3026)

கேள்வி : அல்லாஹ்வை நம்பாதோர் என்ன செய்வார்கள்?
பதில் : பொய்யை இட்டுக்கட்டுவார்கள் (அல்குர்ஆன் 16:105)

கேள்வி : கொடியவன் கஅப் பின் அஷ்ரஃபை கொன்றவர் யார்?
பதில் : முஹம்மத் பின் மஸ்லமா (ரலி) (ஆதாரம் : புகாரி 3031)

கேள்வி : அல்லாஹ்வின் கோபமும் வேதனையும் யாருக்கு ஏற்படும்?
பதில் : அல்லாஹ்வை நம்பிய பின் அவனை மறுப்போர் மீதும்மறுப்பிற்கு உள்ளத்தில் தாராளமாக இடமளிப்போர் மீதும் (அல்குர்ஆன் 16:106)

கேள்வி : மார்பில் அதிக முடியுடையவர்களா இருந்தவர்கள் யார்?
பதில் : நபி (ஸல்) அவர்கள் (ஆதாரம் :புகாரி 3034)

கேள்வி : பசி மற்றும் பயம் எனும் ஆடையை அல்லாஹ் யாருக்கு அணிவித்தான்?
பதில் : பசியும் பயமும் இல்லாமல் இருந்து அல்லாஹ்வை மறந்தவர்களுக்கு (அல்குர்ஆன்16:112)

கேள்வி : முஆத் (ரலி) அவர்களை எந்த நாட்டு ஆளுநராக நபிகளார் நியமித்தார்கள்?
பதில் : ஏமன் (ஆதாரம் : புகாரி 3038)

கேள்வி : இறைவனை மட்டும் வணங்குவோர் என்ன செய்வார்கள்?
பதில் : அல்லாஹ்வின் அருட்கொடைக்கு நன்றி செலுத்துவார்கள் (அல்குர்ஆன் 16:114)

7 comments:

  1. அல்குர்ஆன் யாரிடம் இருந்து யார்முலம் யாருக்கு அருலபட்டதக அல்குர்ஆன் குறுபிடுகிறது

    ReplyDelete
    Replies
    1. இறைவனிடமிருந்து ரூஹுல் குதுஸ் எனும் (ஜிப்ரீல்)மூலம்

      Delete
    2. அல்லாஹ்விடம் இருந்து மனித சமுதாயத்திற்கு.

      Delete
  2. அல்லாஹ்விடமிருந்து ஜிப்ரில் அலை மூலம் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு

    ReplyDelete
  3. 1. அல் முக்ரி என்று அழைக்கப்படும் நபி தோழர் யார்?

    2 பத்ர் யுத்தத்தில் குறைஷிகளின் படையில் இணையாத அரேபிய கூட்டம் யார் ?

    3 பதிர் யுத்ததிற்கு போகும் போது முதலில் அடைந்த கிணறு எது.?
    Please answer

    ReplyDelete
  4. இரண்டாவதாக ஜும்மா நடைபெற்ற பள்ளி இருக்கும் பிரதேசம் எது

    ReplyDelete