Tuesday, August 25, 2015

யார் இவர்? - தல்ஹா பின் உபைதில்லாஹ் (ரலி)

1 சுவனத்தைக் கொண்டு நன்மாராயம் சொல்லப்பட்டவர்களில் இவரும் ஒருவர்,
2 இந்த நபித்தோழர் முஹாஜிர்களைச் சேர்ந்தவராவார்
3உஹுதுப்போரின்போது நபி (ஸல்) அவர்களுடன் இருந்த முஹாஜிர்களில் இவரும் ஒருவர்
4 உஹுதுப்போரில் இவருடைய கை துண்டிக்கப்பட்டது.
5 கஅப் பின் மாலிக் (ரலி) அவர்களை அல்லாஹ் மன்னித்து விட்டபோது அவர் நபிகளாரிடம் வந்தபோது எழுந்து சென்று கைகொடுத்து வாழ்த்துத் சொன்னவர்களில் இவரும் ஒருவர்
6 இந்த நபித்தோழர் நாணயமாற்று வியாபாரத்தில் ஈடுபட்டவராவார்
7. இஹ்ராமின்போது வேட்டையாடப்பட்ட பிராணியை உண்பது பற்றிய சந்தேகத்தை நிவர்த்தி செய்த நபித்தோழர்
8 சலமா பின் அல் அக்வஉ (ரலி) அவர்கள் இந்த நபித்தோழரின் உதவியாளராக இருந்துள்ளார்கள்
9 பேரீத்தமரங்களுக்கு மகரந்த சேர்க்கை செய்வது பற்றிய செய்தியை அறிவித்த நபித்தோழர்
10 இந்த நபித்தோழர் இடத்தில் ஒரு மனிதர் வந்து அபூஹரைரா (ரலி) அவர்கள் அதிகமான செய்திகளை அறிவிக்கிறார் என்று முறையிட்டார்
 
யார் இவர்? விடை
தல்ஹா பின் உபைதில்லாஹ் (ரலி)
1. திர்மிதி 3748 2. புகாரி 4061
3. புகாரி 4061 4 புகாரி 4063
5. புகாரி 4418 6. முஸ்லிம் 3231
7. முஸ்லிம் 2252 8. முஸ்லிம் 3695
9. முஸ்லிம் 4711 10. திர்மிதி 3837

No comments:

Post a Comment