Wednesday, September 2, 2015

யார் இவர்? - அப்துல்லாஹ் பின் ஸலாம் (ரலி)

1 நீங்கள் இறக்கும் வரை இஸ்லாத்திலேயே நிலைத்து நிற்பீர்கள் என்று இவரிடம் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
2 இவர் சுவர்க்கவாசி என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
3 இவருடைய முகத்தில் சிரம் பணிந்(து சஜ்தா செய்)ததற்கான
அடையாளம் காணப்படும்.
4 வானவர்களிலேயே ஜிப்ரீல் யூதர்களுக்குப் பகைவராயிற்றே என்ற செய்தியை நபிகளாரிடம் கூறியவர்.
5 திருமறைக் குர்ஆனின் (46:10) எனும் வசனம் இவர் விசயசத்தில் இறக்கப்பட்டது.
6 இவர் யூதர்களின் மத அறிஞராகவும் இருந்தவர்.
7 நபி (ஸல்) அவர்கள் மதீனா வந்த தகவல் கேள்விப்பட்டு நபிகளாரைச் சந்தித்தவர்.
8 தவ்ராத்தில் விபச்சாரம் செய்தவர்களைக் கல்லெறிந்து கொல்ல வேண்டும் என்ற செய்தியை யூதர்கள் மறைத்த செய்தியை போது வெளிப்படுத்தியவர்.
9 இவர் நபி (ஸல்) அவர்கள் மதீனாவிற்கு வருகை தரும் போது தமது குடும்பத்தாருக்குச் சொந்தமான பேரீச்சந் தோட்டத்தில் கனிகளைப் பறித்துக் கொண்டிருந்தார்.
10 இவர் யூதர்களில் பனூ கைனுகா' கூட்டத்தைச் சேர்ந்தவர்கள்.
11 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை நபியாக ஏற்றுக் கொள்வதற் காக தன்னுடை யூத மதத்தில் சொல்லப்பட்ட இறுதி நபிக்குரிய சில கேள்விகளைக் கேட்டவர்.
 
விடை: அப்துல்லாஹ் பின் ஸலாம் (ரலி)
1 ஆதாரம் புகாரி 3813
3 ஆதாரம் புகாரி
5 ஆதாரம் புகாரி 3812
7.ஆதாரம் புகாரி 3329
9.ஆதாரம் புகாரி 3911
11 ஆதாரம் புகாரி 3911
2 ஆதாரம் புகாரி 3812
4 ஆதாரம் புகாரி 3329
6 ஆதாரம் புகாரி 3911
8 ஆதாரம் புகாரி 3635
10 ஆதாரம் புகாரி4028

No comments:

Post a Comment