Tuesday, August 25, 2015

யார் இவர்? - உஸாமா பின் ஜைத் (ரலி)

1 நபி (ஸல்அவர்களுக்கு மிகவும் விருப்பத்திற்குரியவராக இருந்தார்
2 நபி (ஸல்அவர்கள் இவரை ஒரு படைக்கு தளபதியாக நபிகளார் அனுப்பியுள்ளார்கள்.
3 இவருடைய தந்தையையும் ஒரு போருக்கு படைத்தளபதியாக நபியவர்கள்அனுப்பியிருந்தார்கள்.
4 மஹ்ஸமீ கோத்திரத்தில் ஒரு பெண் திருடியதால் அவருக்கு தண்டனையைக் குறைக்கஇவருடைய பரிந்துரை கேட்கப்பட்டது.
5  நபி (ஸல்அவர்கள் இவரைக் தன் வாகனத்தின் பின்னால் ஏற்றிக்கொண்டு ஸஅத் பின்உபாதா (ரலிஅவர்களை உடல் நலம் விசாரிக்கச் சென்றார்கள்
6 நபியவர்கள் இவர் சிறுவராக இருக்கும் போது இவரை ஒரு தொடையிலும் ஹசன் (ரலி)அவர்களை மறு தொடையிலும் வைத்து "இறைவாஇவர்கள் இருவர் மீதும் நான் அன்புசெலுத்துகிறேன்நீயும் இவர்கள் மீது அன்பு செலுத்துவாயாக!'' என்றார்கள்.
7 மக்கா வெற்றியின் போது நபியவர்களுடன் கஃபாவினுல் நுழைந்தவர்
8 மக்கா வெற்றியின் போது இவரை நபிகளாரின் ஒட்டகத்தின் மேல் ஏற்றிச் சென்றார்கள்
9 ஆயிஷா (ரலிஅவர்கள் மீது அவதூறு கூறிய நேரத்தில் ஆயிஷா (ரலி)அவர்களிடத்தில் நாங்கள் நல்லதைத் தவிர வேறதையும் அறியமாட்டோம் என்றுசொன்னவர்.

10  இவருடைய வீட்டில் நபிகளாரின் மனைவி ஸபிய்யா (ரலிஅவர்கள் அறை இருந்தது
விடை 
உஸாமா பின் ஜைத் (ரலி)
1. ஆதாரம் புகாரி (3730)  2. ஆதாரம் புகாரி (3730)
3. ஆதாரம் புகாரி (3730)  4. ஆதாரம் புகாரி (4304)
5. ஆதாரம் புகாரி (2988)  6. ஆதாரம் புகாரி (6003)
7. ஆதாரம் புகாரி (2988)  8. ஆதாரம் புகாரி (2988)

9. ஆதாரம் புகாரி (2637)  10.ஆதாரம் புகாரி (2038)

No comments:

Post a Comment